Posts

அபிராமி அந்தாதி

 காப்பு தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை   ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற   சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-   கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக. 1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்   மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை   துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே: உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகள...