கண்நோய் காரணிகளும், மருந்தும் ----------------------------- "பாரே பொடிக்கடல் பருவ வெயில் மேற்படல் வாறே கொங்கையாள் மாயை மிகச்செயல் சாயே முளுக்கறல் கண்ணால் அனல்பார்த்தால் சீரேறு பாஷாணம் தின்றதால் கண்நோய்" - திருமூலர் வைத்திய சாரம் 600 - கடுமையான வெய்யில் உடம்பில் படும் படியாக இருப்பவர்களுக்கும், பெண் மோகம் அதிகமாக கொண்டவர்களுக்கும், மிக அதிக வெளிச்சத்தை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும், மிக வெப்பமான பொருள்களை உற்று பார்ப்பவர்களுக்கும், சுத்தம் செய்யாத பாசாண வகைகளை உண்பவர்களுக்கும் கண்நோய் வரும் என்று சொல்லும் திரு மூலர் மேலும், "கண்நோய் வரும் காரணம் இன்னும் கேள் புண்ணான மேகத்தால் பருவேட்டை வாயுவால் தன்னாம் மலக்கட்டால் தன்சலக் கட்டினால் புண்ணாம் இரணத்தில் போடும் காரத்தாலே" - திருமூலர் வைத்திய சாரம் 600 - கண் நோய் வருவதற்கான காரணங்களையும் சொல்கிறார். மேகத்தாலும், வாயுவாலும், மலச்சிக்கல் வருவதாலும், சிறு நீரை அளவுக்கதிகமாக அடக்குவதாலும், புண்ணான காயங்களுக்கு போடும் கார மருந்துகளாலும் கண் நோய் வரும் என்று சொல்வதோடு, "காரச்சுருக்கால் கடும் ராசா தூமத்தால் நேர...