கண்நோய் காரணிகளும், மருந்தும்
கண்நோய் காரணிகளும், மருந்தும்
-----------------------------
-----------------------------
"பாரே பொடிக்கடல் பருவ வெயில் மேற்படல்
வாறே கொங்கையாள் மாயை மிகச்செயல்
சாயே முளுக்கறல் கண்ணால் அனல்பார்த்தால்
சீரேறு பாஷாணம் தின்றதால் கண்நோய்"
வாறே கொங்கையாள் மாயை மிகச்செயல்
சாயே முளுக்கறல் கண்ணால் அனல்பார்த்தால்
சீரேறு பாஷாணம் தின்றதால் கண்நோய்"
- திருமூலர் வைத்திய சாரம் 600 -
கடுமையான வெய்யில் உடம்பில் படும் படியாக இருப்பவர்களுக்கும், பெண் மோகம் அதிகமாக கொண்டவர்களுக்கும், மிக அதிக வெளிச்சத்தை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும், மிக வெப்பமான பொருள்களை உற்று பார்ப்பவர்களுக்கும், சுத்தம் செய்யாத பாசாண வகைகளை உண்பவர்களுக்கும் கண்நோய் வரும் என்று சொல்லும் திரு மூலர் மேலும்,
கடுமையான வெய்யில் உடம்பில் படும் படியாக இருப்பவர்களுக்கும், பெண் மோகம் அதிகமாக கொண்டவர்களுக்கும், மிக அதிக வெளிச்சத்தை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும், மிக வெப்பமான பொருள்களை உற்று பார்ப்பவர்களுக்கும், சுத்தம் செய்யாத பாசாண வகைகளை உண்பவர்களுக்கும் கண்நோய் வரும் என்று சொல்லும் திரு மூலர் மேலும்,
"கண்நோய் வரும் காரணம் இன்னும் கேள்
புண்ணான மேகத்தால் பருவேட்டை வாயுவால்
தன்னாம் மலக்கட்டால் தன்சலக் கட்டினால்
புண்ணாம் இரணத்தில் போடும் காரத்தாலே"
புண்ணான மேகத்தால் பருவேட்டை வாயுவால்
தன்னாம் மலக்கட்டால் தன்சலக் கட்டினால்
புண்ணாம் இரணத்தில் போடும் காரத்தாலே"
- திருமூலர் வைத்திய சாரம் 600 -
கண் நோய் வருவதற்கான காரணங்களையும் சொல்கிறார். மேகத்தாலும், வாயுவாலும், மலச்சிக்கல் வருவதாலும், சிறு நீரை அளவுக்கதிகமாக அடக்குவதாலும், புண்ணான காயங்களுக்கு போடும் கார மருந்துகளாலும் கண் நோய் வரும் என்று சொல்வதோடு,
கண் நோய் வருவதற்கான காரணங்களையும் சொல்கிறார். மேகத்தாலும், வாயுவாலும், மலச்சிக்கல் வருவதாலும், சிறு நீரை அளவுக்கதிகமாக அடக்குவதாலும், புண்ணான காயங்களுக்கு போடும் கார மருந்துகளாலும் கண் நோய் வரும் என்று சொல்வதோடு,
"காரச்சுருக்கால் கடும் ராசா தூமத்தால்
நேரொத்த சாரம் நிறை மூக்கின் வாசத்தால்
பாரொத்த பேதியால் பலப்பல தண்ணீரால்
சீரொத்த கண்ணில் பிறக்கும் வியாதியே"
நேரொத்த சாரம் நிறை மூக்கின் வாசத்தால்
பாரொத்த பேதியால் பலப்பல தண்ணீரால்
சீரொத்த கண்ணில் பிறக்கும் வியாதியே"
- திருமூலர் வைத்திய சாரம் 600 -
கண்நோய் வருகிற வேறு சில காரணங்களும் உள்ளது, பாத ரசத்தின் புகை படுவதாலும், நவச்சாரம் போன்ற மருந்துகளுன் வாசனையை நுகர்வதாலும், அதிகமாக பேதியாவதாலும், பலவகையான நீரைப் பருகுவதாலும் கண்களில் நோய் ஏற்படுகிறது என்கிறார்.
அத்துடன் அதுக்கு அவரே மருந்தும் சொல்கிறார்,
"இந்துப்பு திப்பிலி இயல்பீத ரோகிணி
நந்திப்பூச்சாற்றில் நயந்து அரைத்திட
அந்தகன் கண்ணுக் கருந்ததி தோன்றிடும்
நந்திக்கு நாதன் நயந்து உரைத்ததே"
நந்திப்பூச்சாற்றில் நயந்து அரைத்திட
அந்தகன் கண்ணுக் கருந்ததி தோன்றிடும்
நந்திக்கு நாதன் நயந்து உரைத்ததே"
- திருமூலர் வைத்திய சாரம் 600 -
கண் நோய் ஏதும் உண்டானால், இந்துப்பு, திப்பிலி, பீத ரோகிணி ஆகியவற்றை எடுத்து நந்திய வட்டை பூவின் சாற்றுடன் சேர்த்து மிருதுவாக அரைத்து கண்ணில் பூசிவந்தால் கண்நோய் குணமாகும், அத்துடன் குருடனுக்கும் பார்வை கிட்டும் இதை நந்திக்கு சிவன் சொன்னது என்கிறார் திருமூலர்.
Comments
Post a Comment