மணிக்கடைநூல்

பத்து விரற்கடையிருந்தால் உடல் வெதும்பி , வாயுவினால் நெஞ்சு வலி , கையிற் குத்தும் , உளையும் , வயிற்றில் வாயுத் திரட்சியுங் குன்மமும் உண்டாகும்.


ஒன்பதே முக்காலுக்கு அரையாப்பு , பிளவை , மறட்சி , இருமலுண்டாகும்.


ஒன்பதரைக்கு உடல் வெதும்பி வீங்கும் , சூடுண்டாகும் , விழி காந்தும் ,  உட்சுரம் , மேகம் உண்டாகும் (மது மேகமும் இவற்றில் ஒன்று – சர்க்கரை வியாதி ) , அன்னத்தை தள்ளும் ( அன்னத் துவேஷம் – சாப்பாட்டைப் பார்க்கவும் பிடிக்காது , சாப்பிடவும் பிடிக்காது )


ஒன்பதே காலுக்கு விழி காந்தும் , நீர் கடுத்து சிறுத்திறங்கும் ,  நித்திரை வராது , பீனிசம்  ( மூக்கு , சைனஸ் , பாரா சைனஸ் பள்ளங்களில் சளி உண்டாகி மூச்சு விடத் திணறும்  நிலை )உண்டாகும்.


ஒன்பதுக்கு செவி மந்தமாயுங் கண் புகைச்சலாய் இருக்கும் . குறுக்கில் வாயு இறங்கி வலிக்கும் , துடையும் அயறும் , நடக்க ஒட்டாது .


எட்டே முக்காலுக்கு உடல் காயும் , சில விஷத்தால் குஷ்டம் போல் உண்டாகும் , மூல வாயுவினால் வயிறு பொருமும் , கண் காசமும் ( கண் பார்வையில் பசபசப்பும் , கண் மங்குதலும்  ) பீனிசமும் உண்டாகும் .


எட்டரைக்கு தேக வெதுப்பு , வெட்டை , கிரந்தி , குட்டம் , சொறி , குடல் வாதம் , தாது நஷ்டம் உண்டாகும் .


எட்டே காலுக்கு உடல் பொருத்துகளில் வலித்து உளையும் , தலை வறட்சி , தலைவலி , பீனிசம் , வியர்வை , விஷத்தினால் இளைப்பிருமலும் உண்டாகும் .


எட்டுக்கு மேக காங்கை ( உடல் மேகம் அதிகரித்ததனால் எரிச்சல் உண்டாதல் ) , வயிற்றில் மந்தம் , பொருமல் , வாயுத்திரட்சி உண்டாகும் . அன்னத்தை வெறுக்கும் . சுகமிராது . வேற்றுடற் படும்  ( வேறு உடம்பு போல் காட்டும் ).


ஏழே முக்காலுக்கு மூலம் எழும்பி கைகால் காந்தும் , தலையிடிக்கும் , மதத்திருக்கும் , இரண்டு வருடத்தில் , கண்ட மாலை உண்டாகும் , நாட்கள் செல்லச் செல்ல நாசியில் இருந்து இரத்தம் வரும் .


ஏழரைக்கு எலும்புருக்கி , மேகம் , வயிற்றுப் பொருமல் , கண் எரிவு , ஆறு நாளில் உடம்பிற் காந்தல் கால் கை சந்துளைவு ( கால் கை மூட்டுக்களில் வலி ) விப்புருதி உண்டாகும் .


ஏழே காலுக்கு இடுப்பில் வாயுக் குத்து , பிடிப்பு , வலி சிரசில் பித்தம் , கண் வலி , பாண்டு , சோகை , கைகால் காந்தல் , அதிக நித்திரை உண்டாகும் .


ஏழுக்கு பித்தம் சிரசில் ஏறும் , வாயிலிருந்து  இரத்தம் விழும் , ஷயம் ( T.B ) , கால் கை காந்தல் , சிலந்திப் புண் உண்டாகும் , உஷ்ணம் மிகும் , பலம் தீயும் ( பலக் குறைவுண்டாகும் ) .


ஆறே முக்காலுக்கு அண்ட வாயு ( குடல் பிதுக்கம் , விரை வீக்கம் , புட்டம் வீங்கல் ஆகியன இதில் அடங்கும் ) , கண் வலி , மயக்கம் , மூன்று வருடத்தில் நீரடைப்பு , கல்லடைப்பு , கை கால் காந்தல் , வலி உளைவு , முகத்தில் வியர்வை உண்டாகும் .


ஆறரைக்கு உடல் வெதுப்பு , குத்தல் , தாகம் , அன்னத் துவேஷம் , சூடு , வாதமுண்டாகும் .


ஆறே காலுக்கு மூலக்கிராணி , புளித்த ஏப்பம் , சத்தி , துடை வாழை உண்டாகும். அரை சோறு போற் கழியும் .


ஆறுக்கு இளைப்பும் , நெஞ்சிற் கபம் உண்டாய் , இருபது நாளில் மரணம் .


ஐந்தே முக்கால் முதல் நான்கு விரற்கடை வரை தேகத்தில் கண்ட பிணிகள் அதிகமாகி ஜீவன் பிரியும்.


Comments

Popular posts from this blog

உகப்படிப்பு ஓம் பெருக்குதல்

உச்சிபடிப்பு

சப்த கன்னிமார் பாடல்