சாபங்களின் வகை

சாபங்கள் பலவிதம் – ஒவ்வொன்றும் ஒரு விதம்

நமது உலக வாழ்வில், அதிலும் இந்து தர்மத்தில் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!

ஆனால், அது உண்மை. அச்சாபங்களின் பட்டியல்கள் பின்வருமாறு.

1) பெண் சாபம்,

2) பிரேத சாபம்,

3) பிரம்ம சாபம்,

4) சர்ப்ப சாபம்,

5) பித்ரு சாபம்,

6) கோ சாபம்,

7) பூமி சாபம்,

8) கங்கா சாபம்,

9) விருட்ச சாபம்,

10) தேவ சாபம்

11) ரிஷி சாபம்

12) முனி சாபம்,

13) குலதெய்வ சாபம்

அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். வாருங்கள்:-

1) பெண் சாபம் :

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.

பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2) பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக் கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்த வரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.

பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்

3) பிரம்ம சாபம்:

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, அவர் கற்றுக் கொடுத்த வித்தையை தவறாகப் பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, ஆக, இது போன்ற காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.

பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4) சர்ப்ப சாபம்:

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்.

இதனால், கால-சர்ப்ப தோஷம் ஏற்பட்டுத் திருமணத் தடையைத் தரும்.

5) பித்ரு சாபம்:

முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை, தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்

பித்ரு சாபம், இது பாலாரிஷ்ட சாபத்தை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாக வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்து போவது போன்றவை உண்டாகும்.

6) கோ சாபம்:

பசுவை வதைப்பது, பால் உற்பத்தி ஆகாத பசுவை வெட்டக் கொடுப்பது. கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்

இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7) பூமி சாபம்:

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.

பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும்.

8) கங்கா சாபம்:

பலர் அருந்தக் கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.

கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9) விருட்ச சாபம்:

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.

விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10) தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11) ரிஷி சாபம்:

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.

ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்

12) முனி சாபம்:

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.

முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13) குலதெய்வ சாபம் :

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறப்பதால் உண்டாகும் சாபம் ஆகும். குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் குடும்பத்தை சூழ்ந்துகொள்ளும்.

இப்படியாக மேற்கண்ட சாபங்கள் பல வகைப் படும். இந்தப் பாபங்களில் நாம் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட்டு இருந்தால் நேராக ராமேஸ்வரம் சென்று அங்கு கடலில் இருந்து மண்ணை எடுத்து அதனை சிவனாக பாவித்து. காசியில் உள்ள கங்கையில் கரைக்க வேண்டும். அதே போல மீண்டும் காசியில் இருக்கும் கங்கையை ஒரு கமண்டலத்தில் எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதன் மூலம் நாம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட முடியும்.

Comments

Popular posts from this blog

உகப்படிப்பு ஓம் பெருக்குதல்

உச்சிபடிப்பு

சப்த கன்னிமார் பாடல்